Friday 16 September 2011

முக புத்தகத்தில் எனக்கு கிடைத்த அண்ணன்கள்

என்னடா எழுதுவது என்று எண்ணி கொண்டு இருக்கையில் சரி நமக்கு முக புத்தகத்தில் கிடைத்த அண்ணன்கள் பற்றி எழுதாலாம் என்று எண்ணம் வந்தது..சரி எந்த வரிசையில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசித்த பொழுது சரி முதலில் நாம் யாரை அண்ணன் என்று அழைத்தோமோ அந்த வரிசை  படியே எழுதலாம் என்று முடிவு செய்து தொடங்கி விட்டேன் :)

அண்ணன்கள் :
செல்வா அண்ணா
அவர் ஒரு அண்ணா என்பதிற்கு பதில் காட் பாதர் என்று சொல்லலாம் , எதை பற்றி வேண்டும் என்றாலும் அவரிடம் மனம் விட்டு பேசலாம் எப்பொழுது வேண்டும் என்றாலும் பேசலாம். அவரிடம் சொல்லும் விஷயம் மற்றவர் காதுக்கு எப்பொழுதும் செல்லாது, தகுந்த அறிவுரை கூறுவார்.இன்று வரை அவர் சொன்ன யோசனைகள் எனக்கு தப்பாக சென்றது இல்லை. எனக்கு மனம் சரி இல்லை என்றால் நான் இரவு 1 மணிக்கு கால் செய்தாலும் எடுத்து பேசுவார் நான் தொலை பேசியை  வைக்கும் பொழுது சிரித்து கொண்டு வைப்பேன் அந்த அளவுக்கு என் மனதை சந்தோஷ படுத்து பவர்.பலரின் வேதனைகளை காது கொடுத்து கேட்பவர் .அவர் எனக்கு மட்டும் அல்ல இந்த முக புத்தகதிற்கே அண்ணன்.

சேரன் அண்ணா  :

எளிமையாக பழக கூடியவர். யார் என்னை பற்றி அவரிடம் தவறாக பேசினாலும் "லட்டு என்ன விஷயம் என் எப்புடி நடந்தது? முதலில் உன்னிடம் கேட்டு விட்டு தான் அந்த நபருடன் பேசலாம் என்று இருக்கின்றேன் " என்று முதலில் உண்மையை தெரிந்து கொண்டு பேச நினைப்பவர். எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை ஆனால் அந்த காவலையை போக்கியவர். எனக்கு முதுகு எலும்பு பிரச்சனை வந்த பொழுது வலி தெரியாமல் இருக்க பல உடற் பயற்சிகள் சொல்லி குடுத்து அக்கறை உடன் பார்த்து கொள்பவர் . உரிமையோடு சண்டை பிடிப்பேன் அதே போல் ஆசை தீர "ஐ லவ் யு அண்ணா" என்று சொல்லுபவலும் நான் தான் அவரும் அதே போல் பாசத்துடன் "ஐ டூ லவ் யு டா லட்டு " என்று சொல்லும் அழகே தனி.:)

மதுரை சுந்தர் அண்ணா :


எனக்கு அண்ணன் இல்லை என்றால் இவருக்கு சகோதிரிகளே இல்லை. நான் மதுரைக்கும் ராமேஸ்வரத்திற்கும் பெற்றோருடன் சென்ற பொழுது பல வசதிகளை கேட்காமலே செய்து கொடுத்தவர் . நான் என்றால் கொள்ளை பிரியம் அவருக்கு ஒரு நாள் கூட எனக்கு "குட் நைட்" சொல்லாமல் தூங்கியதும் இல்லை "குட் மோர்னிங்" சொல்லாமல் நாளை துவக்கியதும் இல்லை .

இப்படிப்பட்ட அண்ணன்களை பார்க்கும் பொழுது எனக்கு உடன் பிறந்த சகோதரன்கள் இல்லை என்ற ஏக்கமும் இல்லை அப்புடியே இருந்து இருந்தாலும் இவர்களை போல் இருப்பார்களா என்பது சந்தேகமே :)



                                                


19 comments:

  1. அன்பை விட என்னதான் இந்த உலகில் உள்ளது.
    அவை இறிதிவரை நிலையான போலியின்றி உருவாகும் ஞான தீபம்.
    இருந்தும் நான் குழந்தை வரம் கேட்டு வந்த மகன் என்றதால் இந்தப்பட்டியல்களில் சித்திக்கு கிடைத்த அண்ணன்கள் என்ற பெருமை கொள்வதில் எனக்கு இந்தப்பதிவு முதல இடம் தருகின்றது.

    உலகத்தில் எங்கோ நாம் பிறந்தாலும்
    இங்கு ஒரு தாயின் குழந்தைகள் போல் பிறந்த வரத்தை
    எமது அன்புள்ள விழிச்சித்திக்கு நன்றிகளுடன்
    என்றும் அன்புள்ள அண்ணன்களின் அன்புடன் வாழ்க என்றும் பல்லாண்டுகள்.

    ReplyDelete
  2. சிகரங்களில் அலையும் மேகங்கள் :)

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  4. நெகிழ்ச்சியான பகிர்வு.. நீங்க அதிர்ஷ்ட சாலி.. கயல்! :)))

    ReplyDelete
  5. உன் மேல் பாசம் வைத்த இன்னும் சில அண்ணன்களை விட்டு விட்டாயே கயல். முக்கியமா சதீஷ் நாராயணன்..:))

    ReplyDelete
  6. meenu...nice da....

    akka elloariyum maranthitiyaeeee.

    ReplyDelete
  7. thenakka sathish narayanan annan illai nanbar ,

    ReplyDelete
  8. very well said kayal... Selva Annan is too good :-)

    ReplyDelete
  9. நன்றி திரு .நாகராஜ் அவர்களே

    ReplyDelete
  10. நன்றி நேசமித்ரன் சார்

    ReplyDelete
  11. நன்றி ரத்தினவேல் அய்யா

    ReplyDelete
  12. ஆனந்தி மச்சி உங்களை தோழியாக அமைத்து கொண்டதில் நான் அதிர்ஷ்டசாலி தான் :)

    ReplyDelete
  13. தேன் அக்கா அன்பு சொன்னது போல சதீஷ் என்னுடைய நண்பர் அக்கா :)

    ReplyDelete
  14. தமிழ் அக்கா , அக்காக்களை மறக்க வில்லை அவர்களை பற்றி எழுத வேண்டும் என்றால் நிறைய இருக்கு அவ்வளவு , அத்தனை அக்காக்கள்

    ReplyDelete
  15. ஆமாம் மைதிலி அக்கா

    ReplyDelete
  16. Pappaa super da,தொடர்ந்து எழுதவும் :))

    ReplyDelete