Tuesday 26 February 2013

14/6 A Day For Humanity

ஆஹா ரொம்ப நாள் ஆகிவிட்டது நான் வலைப்பதவில் எழுதி ..இது இன்று வந்து விட்டேன் :)

சென்ற வருடம் ஒரு பத்து  நிமிடமே மட்டுமே ஓட கூடிய ஒரு குறும்படம் ஏவிஎம் ஸ்டுடியோ வில் என்னுடைய சக முக புத்தக நன்பரும் அந்த படத்தின் இயக்குனருமான திரு.பாலாஜி சுப்பிரமனியம் அவர்கள் என்னை அந்த குறும் படத்தை பார்க்க அழைத்தார்கள்.நானும் பத்து நிமிடத்தில் என்ன தான் சொல்கிறார்கள் என்று பார்ப்போமே என்று சென்றேன்.உண்மைய சொல்ல வேண்டும் என்றால் நான் அதற்கு முன்பு பாலாஜியை பார்த்ததே கிடையாது.நான் அந்த முன்காட்சி அரங்கிற்குள்  நுழைந்த உடன்,அவர் ஓடோடி வந்து என்னை வரவேற்ற விதம் என்னை சிலிர்க்க வைத்தது,ஏதோ நெடுநாள் பழகிய நண்பன் போல :)


படத்தின் பெயர் 14/6 A  Day  for  Humanity, பெயரை  பார்த்த உடன் ஏதோ NDTV  நியூஸ் மாதிரி தெரிகிறது சரி சமுகத்துக்கு  ஏதோ சொல்ல நினைக்கிறார்கள்  என்று மட்டும் புரிந்தது. ஆம் நான் நினைதத்தர்க்கும் மேல விஷியத்தை சொல்லி இருகிறார்கள் மிக ஆச்சிரியமான விதத்தில். எனக்கு தெரிந்த வரையில் இதைவிட சிறப்பாக ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியாது என்பை ஆணித்தரமாக சொல்கிறேன்.

இதோ படத்தை பற்றி ஒரு பார்வை

                                                14/6

குப்பத்தில் வாழும் ஒரு இளம் வாலிபனைபெயர் "சிலுவை " எதிர் கோழ்டி ரௌடியினர் அருவளால் வெட்டுவதற்கு துறத்துக்கிரார்கள் , அவனோ தன்  உயிருக்கு பயந்து தப்பி ஓடிகிறான் , ஓடுகின்ற வழியில் ஒரு கல்லுரி வளாகத்துக்குள் ஒளிந்து கொள்வதற்காக நுழைகிறான், அப்பொழுது அந்த நேரத்தில் இரத்ததானம்  பற்றிய ஒரு விழிப்புணர்வு முகம் நடந்து  கொண்டு இருக்கின்றது. அப்பொழு  மருத்துவர் மாணவர்களிடம் இரத்ததானம்  செய்வதால் என்னன்னா பலன்கள் உண்டு  என்பதை விளக்கி விட்டு, முகாமை ஆரம்பிக்கின்றார். அப்பொழுது மறைய வந்த வாலிபனோ சிறுது யோசித்து விட்டு , இரத்ததானம்  செய்யும் இடத்திற்கு சென்று தானும் இரத்தம் கொடுக்க விரும்பு கின்றேன் என்று சொல்லு கிறான். மருத்துவர் அந்த வாலிபனை பரிசோதித்து விட்டு அவனை அடுத்த கட்ட பரிசோதனைக்கு இரத்த  பரிசோதனை செய்ய அனுப்புகிறார்.பரிசோதனையில் அவனுடைய இரத்தம் அறிய வகையான AB -ve  என்று தெரிய வருகிறது , பிறகு அவனது இரத்தத்தை பெற்று கொள்கிறார் , சிறிது நேரத்திற்கெல்லாம் மருத்துவருக்கு அவரின் மகனிடம் இருந்து ஒரு போன் கால் வருகிறது. அவன் தன நண்பனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று கூறுகிறான் , மருத்துவர் அவனை தன்  மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொல்கிறார்.மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவர் கால் செய்து அந்த விபத்துகுள்ளானவர்க்கு  AB-ve  இரத்தம்  தேவை படுகிறது என்று சொல்ல மருத்துவர் முகாமிலிருந்து அந்த  வாலிபன் சிலுவை கொடுத்த இரத்தத்தை  எடுத்து கொண்டு செல்கிறார் மருத்துவமனைக்கு...இங்கு தான் கதையின் திருப்பீடு (twist)..யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்புமுனை .நான் இங்க அந்த படத்தோட லிங்க் கடைசியா  ஒட்டுகிறேன்.அதை பார்தலே உங்களுக்கு தெரிய வரும் அந்த திருபீடு  என்ன , இரத்ததானம்  செய்வதால் எவ்ளோ பெரிய நன்மைகள் கிடைக்கின்றது என்பதை பார்த்து தெரிந்து கொள்வீர்கள்.


 பாலாஜி உங்களை பார்த்து தலை வணங்குகிறேன்,ஒரு மனிதன் அந்த இரத்ததானத் தால் அவன் திருந்தி அவன் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் விதம் சபாஷ் .இதற்க்கு மேல் ஒரு விஷியத்தின் முக்கியத்துவத்தை சமுதாயத்திற்க்கு எடுத்து கூற  இயலாது.இதை இவ்வள்வு  தாமதமாக எழுதுவதற்க்காக  வருந்துகிறேன். இதை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் இந்த படத்தை பார்த்து விட்டு மற்றவற்களுக்கும்  இந்த linkai  பகிர்ந்து ஒரு விழிபுணர்சியை ஏற்ப்படுத்துங்கள்.