Friday 11 March 2011

இயற்கை அன்னையின் கோபம்

அன்பின் சுவருபமாய் , அமைதியின் திரு உருவமாய் இருந்த உனக்குள் இத்தனை கோபமா ?உன்னை கடவுளாக  என்னியதுனால நீ இத்தனை பலிகளை வாங்கி கொண்டாய் ?
      நாட்டில் நடக்கும் பல அக்கிறமங்களை பொறுக்க மாட்டாமல் இவர்கள் எல்லாம் வாழ்வதற்கே.லாயக்கு அற்றவர்கள் என்பதால் கோபம் கொண்டாயோ ?





அல்லது தலை கனத்தோடு பணக்கரனாய் திரியும் மனிதர்களை "பணம் ,சொத்துக்கள் இருந்தால் எதையும் விலைகொடுத்து வாங்கி விடலாம்  யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்காதே , நான் நினைத்தால் உன்னை ஒரு நிமிடத்தில் ஓட்டாண்டி அக்கி நடுத்தெருவில் நிறுத்த முடியும்" என்பதை காட்டவா கோபம் கொண்டாய் ?


ஏற்ற தாழ்வு பார்க்கும் மனிதர்களுக்கு இவ்வளவு தான் உன் வாழ்கை என்று நிருபிபதர்கா உன் கோபத்தை காண்பித்தாய் ?

   அன்னையே உனக்கு எதிராய் முன்னேற்றம் என்ற பெயரால் விஞ்ஞானத்தின் மேல் பழி போட்டு அவர்களின் வசிதிக்காக உன்னை இடித்து,குடைந்து , துன்புறுத்தி ,மாசு படுத்தி , உன் மேல் மேலும் மேலும் பாரங்களை ஏற்றுவதினால் வலி தாங்காமல் என்னால் பொறுக்க முடிய வில்லையடா  என்று பிளைந்து கொண்டு உன் உக்கிரத்தை காண்பித்தாயோ?
இப்பொழுது  சொல் அம்மா உன் உக்கிர கோபத்திருக்கு யார் காரனம்?

Monday 7 March 2011

நன்றிகள் பல

இணையதளம் என்றாலே நல்லதுக்கு இல்லை கெட்டுப்போவதற்கு தான் என்று சொல்லுவதை உடைதெரிந்தவர்கள் என் முகப்புத்தக ஆண்  நண்பர்கள்.


மைகேல், பாலா,சரோ,அணில் , பிரபு,ராம், ஷங்கர்  மற்றும் மில்லர் , நண்பர்கள் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்று உதாரனத்துக்குரியவர்கள்.

ஒரு சகோதரனாய் செல்வா அண்ணா
                             
 எந்த எதிர்பார்ப்பும் இன்றி பழகுபவர், மற்றவர்களின் திறமையை கண்டறிந்து அவர்களை வெளியில் கொண்டுவருபவர், ஒரு ஈகோ இல்லாத மனிதர் .எனக்கு எதாவுது மனகஷ்டம் என்றாலோ அல்லது ஒரு ஆலோசனை வேண்டும் என்றாலோ முதலில் அவரிடம் தான் கேட்பேன் பேசுவேன்.மொத்தத்தில் எனக்கு ஒரு சொந்த சகோதரன் இல்லாத குறையை தீர்த்து கொண்டு இருப்பவர். அவரை காட் பாதர் என்றும் சொல்லலாம், ஐ லவ் யு அண்ணா :).

இதை அனைத்தையும் மீறி இடு செய்யமுடியாதது  அன்பு( அன்புச்சு இது நட்பின் பாசமாக நான் அழைக்கும் பெயர், என் குடும்பத்தாரும் அப்படி தான் அவனை அழைப்பார்கள்)வின் நட்பு
                                     
 எங்களுக்குள் எத்தனையோ கருத்துவேறுபாடுகள் வரும் அதற்காக பெரிய சண்டையும்  வரும் ஆனால் கோவம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் இன்பது போல அவனின் பாசம் அளவற்றது .உதரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியை சொல்லு கிறேன்,போன வருடம்  நான் வந்தவாசியில் மங்களம் என்னும் ஒரு கிராமத்திற்கு எனது தாய் உடன் ஓய்வுக்க சென்றேன் அங்கு எங்களுக்கு ஒரு பண்ணை வீடு உள்ளது, நான் சென்ற இரண்டாம் நாள் இரவு சுமார் பதினொரு மணி இருக்கும் திடீர் என்று எனக்கு நெஞ்சு வலி எடுத்தது, அந்த வீட்டில் நானும் அம்மாவும் மட்டும் தான் இருக்கிறோம், நான் துடிப்பதை பார்த்து அம்மாவும் பயந்து பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்க சென்று விட்டாங்க, அந்த நேரம் பார்த்து அன்புச்சு உடைய கால் வந்தது, வலியை பொறுத்து கொண்டு சிறிது நேரம் கழித்து பேசுகிறேன் என்று கூறு கட் செய்தேன், என் குரலை வைத்து யுகிதானா என்று தெரியவில்லை அடுத்தநாள் காலை ஏழு மணிக்கு அவன் வந்து  என்னை எழுப்பி எப்புடி இருகிறாய் என்று கேட்டான் , என்னால் அந்த நிமிடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சந்தோஷத்தில் அழுது விட்டேன். அவன் பயணம் செய்து வந்த துரம் சென்னயில் இருந்து 230 கி .மி. அன்றிலிருந்து இன்று வரை வெளியூர் நான் செல்ல வேண்டி இருந்தால் என் பெற்றோரின் அனுமதியுடன் கூட வருவான். எவ்ளோ பெரிய சண்டை நடந்தாலும் அடுத்த ஐயிந்தவுது நிமிடம் சாரி அம்மு என்று இறங்கி வருபவன் அவனே முதல். எனக்கு எல்லா விஷியத்திலும் சரி என்னுடைய பணியுளும் சரி எனக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பவன்.இன்று பல பேர் எங்களுடைய நட்பை தவறாக பேசினாலும் அவன் சொல்லும் ஒரே வார்த்தை "நம்மை பற்றி பேசுவதற்கு இரண்டு குடும்பங்களுக்கு மட்டும் தான் உரிமை உண்டு  ஒன்று உனது பெற்றோர் இன்னொன்று எனது குடும்பம்.நம் நட்பை புரிந்து கொண்டவர்கலோடு நாம் இருப்போம் , மற்றவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை " என்று சொல்லுவான்.இந்த மகளிர் தினத்தில் நான் அன்புச்சுவுக்கு நன்றி சொல்வதில் பெருமை கொள்கிறேன்.கடைசி வரை இந்த நட்பு இப்புடியே இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் . 

Sunday 6 March 2011

Naanum blog ezhudhuren

Dear friends,


Naanum blog ezhudha aarambichi iruken.. konjam enakku support pannunga, ezhuthu thuraike naan pudhusu:)..Pala vishiyangal vechi iruken ezhudhuvadharku..pakkalam konjam konjamaga..unga anaivarin uthuzhaippu thevai enakku.

Nandri