அண்ணன்கள் :
செல்வா அண்ணா
சேரன் அண்ணா :
எளிமையாக பழக கூடியவர். யார் என்னை பற்றி அவரிடம் தவறாக பேசினாலும் "லட்டு என்ன விஷயம் என் எப்புடி நடந்தது? முதலில் உன்னிடம் கேட்டு விட்டு தான் அந்த நபருடன் பேசலாம் என்று இருக்கின்றேன் " என்று முதலில் உண்மையை தெரிந்து கொண்டு பேச நினைப்பவர். எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை ஆனால் அந்த காவலையை போக்கியவர். எனக்கு முதுகு எலும்பு பிரச்சனை வந்த பொழுது வலி தெரியாமல் இருக்க பல உடற் பயற்சிகள் சொல்லி குடுத்து அக்கறை உடன் பார்த்து கொள்பவர் . உரிமையோடு சண்டை பிடிப்பேன் அதே போல் ஆசை தீர "ஐ லவ் யு அண்ணா" என்று சொல்லுபவலும் நான் தான் அவரும் அதே போல் பாசத்துடன் "ஐ டூ லவ் யு டா லட்டு " என்று சொல்லும் அழகே தனி.:)
மதுரை சுந்தர் அண்ணா :
எனக்கு அண்ணன் இல்லை என்றால் இவருக்கு சகோதிரிகளே இல்லை. நான் மதுரைக்கும் ராமேஸ்வரத்திற்கும் பெற்றோருடன் சென்ற பொழுது பல வசதிகளை கேட்காமலே செய்து கொடுத்தவர் . நான் என்றால் கொள்ளை பிரியம் அவருக்கு ஒரு நாள் கூட எனக்கு "குட் நைட்" சொல்லாமல் தூங்கியதும் இல்லை "குட் மோர்னிங்" சொல்லாமல் நாளை துவக்கியதும் இல்லை .
இப்படிப்பட்ட அண்ணன்களை பார்க்கும் பொழுது எனக்கு உடன் பிறந்த சகோதரன்கள் இல்லை என்ற ஏக்கமும் இல்லை அப்புடியே இருந்து இருந்தாலும் இவர்களை போல் இருப்பார்களா என்பது சந்தேகமே :)