Friday 16 September 2011

முக புத்தகத்தில் எனக்கு கிடைத்த அண்ணன்கள்

என்னடா எழுதுவது என்று எண்ணி கொண்டு இருக்கையில் சரி நமக்கு முக புத்தகத்தில் கிடைத்த அண்ணன்கள் பற்றி எழுதாலாம் என்று எண்ணம் வந்தது..சரி எந்த வரிசையில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசித்த பொழுது சரி முதலில் நாம் யாரை அண்ணன் என்று அழைத்தோமோ அந்த வரிசை  படியே எழுதலாம் என்று முடிவு செய்து தொடங்கி விட்டேன் :)

அண்ணன்கள் :
செல்வா அண்ணா
அவர் ஒரு அண்ணா என்பதிற்கு பதில் காட் பாதர் என்று சொல்லலாம் , எதை பற்றி வேண்டும் என்றாலும் அவரிடம் மனம் விட்டு பேசலாம் எப்பொழுது வேண்டும் என்றாலும் பேசலாம். அவரிடம் சொல்லும் விஷயம் மற்றவர் காதுக்கு எப்பொழுதும் செல்லாது, தகுந்த அறிவுரை கூறுவார்.இன்று வரை அவர் சொன்ன யோசனைகள் எனக்கு தப்பாக சென்றது இல்லை. எனக்கு மனம் சரி இல்லை என்றால் நான் இரவு 1 மணிக்கு கால் செய்தாலும் எடுத்து பேசுவார் நான் தொலை பேசியை  வைக்கும் பொழுது சிரித்து கொண்டு வைப்பேன் அந்த அளவுக்கு என் மனதை சந்தோஷ படுத்து பவர்.பலரின் வேதனைகளை காது கொடுத்து கேட்பவர் .அவர் எனக்கு மட்டும் அல்ல இந்த முக புத்தகதிற்கே அண்ணன்.

சேரன் அண்ணா  :

எளிமையாக பழக கூடியவர். யார் என்னை பற்றி அவரிடம் தவறாக பேசினாலும் "லட்டு என்ன விஷயம் என் எப்புடி நடந்தது? முதலில் உன்னிடம் கேட்டு விட்டு தான் அந்த நபருடன் பேசலாம் என்று இருக்கின்றேன் " என்று முதலில் உண்மையை தெரிந்து கொண்டு பேச நினைப்பவர். எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை ஆனால் அந்த காவலையை போக்கியவர். எனக்கு முதுகு எலும்பு பிரச்சனை வந்த பொழுது வலி தெரியாமல் இருக்க பல உடற் பயற்சிகள் சொல்லி குடுத்து அக்கறை உடன் பார்த்து கொள்பவர் . உரிமையோடு சண்டை பிடிப்பேன் அதே போல் ஆசை தீர "ஐ லவ் யு அண்ணா" என்று சொல்லுபவலும் நான் தான் அவரும் அதே போல் பாசத்துடன் "ஐ டூ லவ் யு டா லட்டு " என்று சொல்லும் அழகே தனி.:)

மதுரை சுந்தர் அண்ணா :


எனக்கு அண்ணன் இல்லை என்றால் இவருக்கு சகோதிரிகளே இல்லை. நான் மதுரைக்கும் ராமேஸ்வரத்திற்கும் பெற்றோருடன் சென்ற பொழுது பல வசதிகளை கேட்காமலே செய்து கொடுத்தவர் . நான் என்றால் கொள்ளை பிரியம் அவருக்கு ஒரு நாள் கூட எனக்கு "குட் நைட்" சொல்லாமல் தூங்கியதும் இல்லை "குட் மோர்னிங்" சொல்லாமல் நாளை துவக்கியதும் இல்லை .

இப்படிப்பட்ட அண்ணன்களை பார்க்கும் பொழுது எனக்கு உடன் பிறந்த சகோதரன்கள் இல்லை என்ற ஏக்கமும் இல்லை அப்புடியே இருந்து இருந்தாலும் இவர்களை போல் இருப்பார்களா என்பது சந்தேகமே :)